Pages

Wednesday, December 23, 2020

வெளியே செல்லாமல் சில வாரங்கள்...!

 


உலகநாடுகளின் மத்தியில் 
என்றென்றும் பம்பரமாய் 
சுழன்று கொண்டிருக்கும் 
நாடானது அமெரிக்கா...

இவ்விடத்தில் வசித்துவரும்
எங்களின் புத்தாண்டின்
தொடக்கம் உற்சாகத்துடன்
இனிமையாய் தொடங்கியது ...

இன்னல்பல இடம்பெறுமென்ற 
உண்மையறியா பேதையாய் 
உல்லாசமாக வலம்வந்தோம்  
மனம்போன போக்கினிலே ...

சீனாவின் மாகாணமாம் 
யுகானென்ற பெயருடையது 
கொரோனாவின் தாக்கத்தால் 
வீதியெங்கும் மரணவோலம் ...

இணையத்தின் வாயிலாக 
விவரத்தை அறிந்தவுடன் 
கண்ணீர் மல்கியோடியது 
காட்டாற்று வெள்ளமாய் ...

வாழ்விடம் வேறாயினும் 
நாமெல்லாம் மனிதர்களன்றோ 
வேற்றுமையில் ஒற்றுமைகாணும் 
நாட்டினரவல்லவா இந்தியமக்கள்...!

சீனாவின் இடைவிடாலறல்கள் 
இத்தாலியின் தொடர்கூச்சல்கள் 
எண்ணிலடங்கா மரணவோலங்கள்
திக்குமுக்காடியது உலகமெங்கும் ...

தொலைதூரமென்ற அலட்சியமா 
என்றெண்ணம் எழாமலில்லை
கொரோனோவின் தீவிரத்தால்
முதலிடத்தை எட்டிப்பிடித்தோம் ...

உலகப்போரை கண்டிராத 
எங்களின் விழிதனிலே 
பேரச்சம் குடிகொண்டதில் 
பேராச்சரியம் என்றேதுமில்லை...

நோயின் காரணமேதும் 
கண்ணுக்கு புலப்படவில்லை 
கொரோனாவின் வீரியமிக்க 
தாக்குதல் குறைந்தபாடில்லை ...

மறைந்திருந்து தாக்கும் 
மர்மத்தினால் என்னவோ 
மரணங்களின் அதிகரிப்பு
மணிக்கொருதரம் உயருகிறது...

சிட்டுக்குருவியாய் வட்டமடித்த 
மக்களின் வாழ்வானது 
சிறகொடிந்த பறவைப்போல் 
சிறைவாசம் செய்கிறோம் ...

வீடுகளிருக்கும் நம்மைபோன்றவர்கள் 
இருப்பிடமன்றி வீதியில்வாழும் 
மக்களின்நிலையெண்ணி என்றாவது 
உணர்ந்து உதவியுள்ளீர்களா ...?

காட்டித்தீபோல் பறந்துவிரியும் 
தொற்றுண்ணியின் ஆயுட்காலம் 
முடியும்தருவாயினை உணர்ந்தவர் 
எவரேனுமுள்ளனரோ இவ்வுலகத்தில் ...!

பள்ளிக்கூடங்கள் மட்டுமின்றி 
கல்லூரிகளின் காலவரையற்ற 
விடுமுறைகள் வளர்ந்துவரும் 
இளம்சமுதாயத்தின் சாபக்கேடா ...?

விவசாயம்முதல் வளர்ந்துவரும் 
அலுவலகம் தொழிற்ச்சாலைவரை 
தடைப்பட்ட பணிகளினால்
பொருளாதாரசிக்கல்கள் ஏராளம் ...!

கண்ணுக்குத்தெரியும் எதிரியை 
கணநொடியில் வீழ்த்திவிடலாம் 
தொற்றால் பற்றிக்கொள்ளும் 
நோய்க்கேதுமருந்து இன்றுவரை 

உணவுப்பொருள் பற்றாக்குறை 
வெளியில்சென்றுவர பேரச்சம் 
விடியலைத்தேடி விழிபிதுங்கி 
நிற்கின்றோம் வாழ்வென்னவென்று ...?

நோயாலவதியுறும் மக்களுக்குதவும் 
நடமாடும் தெய்வங்களுக்கு 
நன்றிதனை காணிக்கையாக்கி 
மனிதநேயத்தை வளர்த்திடுவோம்...

சுற்றுப்புறத்தை தூய்மையாக்குவோம் 
சுயசுகாதாரத்தை மேற்கொள்வோம் 
சமூகதூரத்தை கடைப்பிடிப்போம்
கொரோனவை வென்று காட்டுவோம் ...!



No comments:

Post a Comment