Pages

Sunday, September 13, 2020

தாத்தா பாட்டி தினம் வாழ்த்துக்கள் எம் மூதாதையர் பற்றி நானறிந்த தகவல்கள்


நம்மில் எத்தனை பேர் தங்களது மூதாதையர்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம் ?

எத்தனையோ வரலாறுகளைப் பற்றி படித்தும் கேட்டறிந்த நமக்கு நம்மின் முன்னோர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றதொரு எண்ணம் எழாமலிருந்த காரணம் என்னவோ !

என்னுயிரினும் மேலான பெருமைமிகுந்த
எங்களன்பு தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்
மனமார்ந்த கோடான கோடி வாழ்த்துக்கள் 🙏🙏🙏


பழகிய நாட்களும் மிகக் குறைவான நாட்களே!

இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்ட்டசாலியே ... என்னவென்று கேட்டால் என் தங்கைக்கு கிடைத்திராத பாக்கியங்கள் நான் சிறிதுகாலம் பழகிட்ட நாட்கள்.

எங்கள் தாத்தாக்களுடன் வாழ்ந்து பார்க்கும் கொடுப்பினை எங்களிருவருக்கும் கிட்டவில்லை.

குழந்தையாய் சுற்றித் திரிந்த நாட்களில் என் மனதினில் பதிந்திட்ட சில நினைவுத் துளிகள் ...

தந்தைவழி ஆத்தா குடும்பம் பற்றி நான் அறிந்தது :

என் ஆத்தா மிகவும் சுறுசுறுப்பானவர், அதிவேகமாக நடக்கக்கூடியவர், மிகவும் சிக்கனமானவர். ஒல்லியான உடல்வாகு உடையவர் , குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார் என்று தாய் தந்தையர் மூலம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் .



என் அப்பா வழி ஆத்தாவின் பெயர் அலமேலு அவரின் குணநலன்கள் என் தங்கையுடன் ஒத்துப்போவதால் நாங்கள் அவளை சின்ன அலமு என்று செல்லமாக அழைப்போம். எங்கள் தாத்தா வடிவேல் தேவர் கடும் உழைப்பாளி. விவசாயம் பார்த்தவர் திடமான உழைப்பாளி ஆனால் இந்த ஜென்மத்தில் எங்களுக்கு அவரைப் பார்க்கும் கொடுப்பினை இல்லை. எங்கள் தாத்தாவிற்கும் ஆத்தாவிற்கும் பிறந்த வாரிசுகளில் சிலர் ( இருவர் )தவறியதாக கேள்வியுற்று இருக்கிறேன்.

எங்கள் ஆத்தா தான் மூத்தவர் அவங்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும்ஆக மொத்தம் 8 குழந்தைகள் என் தந்தைதான் கடைசி பையன் அதானல் கொஞ்சம் செல்லம் அதிகம். கோவிந்தராஜ் , கோபாலன், நாராயணன் ( எனது தந்தை )மற்றும் ஜாம்புவோனடை பக்கிரியம்மா, அஞ்சம்மாள் பஞ்சநதிக்குளம், குன்னலூர் நீலாவதி , பாண்டிக்கோட்டகம் வசந்தா , பெருமழை பத்மாவதி தற்போது அத்தகளில் ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார் என்பது தான் நிதர்சனமான உண்மை😭

எனது தாத்தா வடிவேல்த்தேவருக்கு ஒரு சகோதரி , அவர் எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள தில்லைவிளாகத்தை சேர்ந்தவர், அவர்களின் பெயர் சௌபாக்யவதி.

சிறுவயதில் ஆத்தா எனக்கு சிங்கப்பூர் சென்றுவந்த பரிசுப்பொருட்களை எனக்களித்தது சந்தோசமாக இருந்தது. அந்த புதுச்சட்டையும் கால்களுக்கு வாங்கி வந்த கட் ஷூவும் எனக்கு பிடித்திருந்தது.

தாய்வழி ஆத்தா குடும்பம் பற்றி நான் அறிந்தது :

என்னை பெற்றெடுக்காத இன்னொரு தாய் என் தாய் வழி ஆத்தா மிகுந்த அன்புடையவர், நான் அவரின் செல்லப் பேத்தி என்றே சொல்லவேண்டும் 🥰என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்குத்தருவதற்கு நாட்டு முட்டைகளை வாங்கி வரச் செய்து ஊட்டமளித்து வளர்த்தார். முருங்கை கீரையை தவறாமல் உணவில் ஊட்டிவிட்டார். என் தாத்தாவும் ஆத்தாவும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்துள்ளார்கள்.இடியாப்பத்தினை முன்னிறுத்திய உணவு நிறுவனத்தை சிங்கப்பூரில் பிரசித்தி பெற்ற கம்பங்கிலாமா என்றதொரு பகுதியில் நடத்தி வந்துள்ளனர்.

என் தாய்வழித் தாத்தா சொக்கலிங்கம் மற்றும் பொன்னம்மா இவர்களின் மூதாதையர்கள் காலம் முதலே சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் ரங்கூனுக்கு அருகாமையில் வசித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனது அம்மாவின் அம்மாவினுடைய மூதாதையினர் திருவாரூர் மாவட்டத்திலிருந்து சென்றதாக என் தாயின் மூலம் அறிந்திருக்கிறேன்.

அவர்களின் பிறப்புகள் வெளிநாட்டில் இருந்தமையால் அவர்களுக்கும் முன்னோர்களைப்பற்றிய முழுமையான விவரம் தெரியவில்லை.

எனது அம்மா வழி தாத்தா பரக்கலக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர். இவர்களுக்கு மொத்தம் 7 குழந்தைகள் கிருஷ்ணன், கனகசபை, கமலா, புஷ்பவள்ளி , ஜெயகோபால், ஜெயஜோதி (எனது தாய்) மற்றும் மங்கையர்க்கரசி.

எனது தாத்தாவின் சகோதரர் சிவலிங்கம் அவரின் வாரிசுகளும் அதே ஊரிலேயே வசித்து வருகின்றனர்.

 பரக்கலக்கோட்டை ஆத்தா  எனக்கு நிலக்கடலையை உடைத்து தருவார். எம் தாயின் அடியிலிருந்து என்னை பலமுறை காப்பாற்றியுள்ளார். அப்படியெல்லாம் 
என்னுடன் நெருக்கமாக இருந்தவர்  என்னை விட்டு சீக்கிரம் விலகிவிடுவார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. 

நானும் என் அம்மாவும் தந்தையை சந்திக்க மலேசியா சென்றுவிட்டு, அங்கிருந்து எங்கள் பெரியப்பா வீட்டிற்க்கு சென்று திரும்புமுன் என் ஆத்தா பாம்பின் விஷம் தாக்கி இறந்துவிட்டதாக செய்தியறிந்த கனம் நான் நிலைகுலைந்து போனேன். அன்றிலிருந்து என் வாழ்வில் வெற்றிடத்தை உணர்ந்தேன்.

















No comments:

Post a Comment