உறவுகளின் புன்னகை
வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம்
மனதில் பொங்க..
நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்.
சந்தோஷமும் செல்வமும்
நம் வாழ்வில் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சங்கடங்கள் ஏதுமின்றி
கை கூப்பி வரவேற்போம்
தை பொங்கல் திருநாளை...
குடும்பத்தில் ஒற்றுமை நிலவ,
அமைதி மேலோங்க,
எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
Saturday, May 9, 2020
பிறந்தநாள் வாழ்த்துக்கள்அம்மா
ஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்து
பற்பல வருடங்கள் நெஞ்சில் சுமந்து
எங்கள் மீதான அன்பினில் இன்றளவும்
குறைவின்றி எங்களுக்காக வாழ்ந்து வரும்
ஈடு இணையற்ற எங்களன்பு அன்னையே
இன்பம் துன்பம் குடிகொண்ட வேளையிலும்
உளமாற எம் சிரிப்பிலும் அழுகையிலும்
வாழ்வின் ஒவ்வொரு ஏற்ற தாழ்விலும்
எம்மை வாழ்வில் சிறந்திட நல்வழிப்பட
உற்ற துணையாய் உயிர்த் தோழியாய்
எம்மின் நிழல்போல் இணைந்தே வாழ்ந்திடும்
மேன்மை பொருந்திய ஆருயிர்த் தாயே
இரக்ககுணம் குடிகொண்டு வாழும் தங்கள்
இருதயத்தில் இளகிய மனதிற்கு பஞ்சமேது
பசியென்று வரும் வறியவர் அனைவரின்
வயிற்றுப்பசி நீங்கி உள்ளமும் நிறைந்து
உற்சாகத்துடன் தம்நாமம் தழைக்க வாழ்த்தினை
பெறுவது மட்டுமன்றி தர்மங்கள் செய்திடும்
உங்களுடைய சிறப்பான மனதை போன்று
உங்களுடைய பிறந்தநாளும் இனிதாக அமைய
மனதார உளமாற வாழ்த்தி பிரார்த்திக்கின்றோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்அம்மா
நொடியின்றி நோய் நலமுடன் வாழ்க !!!
என்றென்றும் அன்புடன், சுபத்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
அழகிய உந்தன் திருக்கரங்களில்
ஆராதிக்க விழைகிறேன் - மீண்டும்
அழும் குழந்தையாய் மாறி...
- குன்னலூர் சுபத் -
ஆராதிக்க விழைகிறேன் - மீண்டும்
அழும் குழந்தையாய் மாறி...
- குன்னலூர் சுபத் -
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உயிரென்னும் கருவிற்கு
உருவம் தந்திட்டாய் ...
அதற்கு சுகமான
தாய்மடி தந்திட்டாய் ...
நிறைமாதம் வரையிலும்
சிரமங்களை அனுபவித்தாய் ...
சுகமான சுமையெண்ணி
இன்முகம் பூத்திட்டாய் ...
மறுஜென்மம் எடுத்து
என்னை ஈன்றிட்டாய் ...
வலியெடுத்து ஈன்றபின்னரும்
மகிழ்ச்சி கொண்டாய் ...
உதிரத்தை பாலாக்கி
என்னுயிர் வளர்த்திட்டாய் ...
கண்ணின் விழியாய்
உறங்காமல் காத்திட்டாய் ...
பசியை மறந்திட்டு
பகலிரவு காவல்காத்தாய் ...
என்பிஞ்சு விரல்தனை
தம்கரம் பிடித்திட்டாய் ...
உச்சிமுகர்ந்து அள்ளியணைத்து
முத்தங்களை பரிசளித்தாய் ...
என்னின் சுகதுக்கத்தில்
கைகோர்த்து நிற்கிறாய் ...
எனைநினைத்து இன்றளவும்
ஓய்வின்றி உழைக்கின்றாய் ...
ஏனையீன்ற நடமாடும்
தெய்வத்திற்கு பிறவிப்பயனாய் ...
என்றென்றும் சிரம்தாழ்ந்து
பொற்பாதம் பணிந்திட்டு
மகிழ்வுடன் உரைத்திடுவேன்
மனதில் சிறுகர்வம் கொள்வேன்
உலகிற்சிறந்த தாய் நீயென்று
அன்னையர் தின வாழ்த்துக்கள்💐
- சுபத்ரா நாராயணன் -
Subscribe to:
Posts (Atom)