கடல் கடந்து வாழும் உலகத்தமிழ் மக்களின்
ஒட்டுமொத்த உரிமைக்குரலின் பிரதிபலிப்பாய்...
தமிழரின் வீரத்தை பறைசாற்றும்
பழம்பெருமைகளில் ஒன்றான ஜல்லிக்கட்டைத்
தடைகளைத் தகர்த்து தவிடுபொடியாக்கி
தொடர்ந்து நடத்தி சிறப்புற்று வாழ
எங்கள் தமிழ் நண்பர்களின் உளமார்ந்த
முயற்சியின் சிறு அடையாளமாய்...!!!
அமெரிக்காவின் சிகாகோ மாகாணம்...
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுக்கு மட்டுமல்ல…
ஜல்லிக்கட்டுத்தடைக் கோரி தமிழ் முரட்டுக்காளைகளின்
உரிமைக்குரலால் இனி ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களின்
உள்ளத்திலும் எண்ணத்திலும் நிலைக்கட்டும்...!