Pages

Friday, May 5, 2017

அம்மா...!


      

என்எண்ணத்தின் உயிரோட்டமாய்
      வடிவமைந்தது என்கவிதை …

என்சுவாசத்தின் உயிர்மூச்சியினை
        பிரதிபலித்தது என்அம்மா...!

எங்கள் அன்னை


ஈரைந்து மாதங்கள் கருவறையில்
எங்களை சுமந்திட்ட எங்களுயிரே!

கண்ணிற்குப் புலப்படாத கார்மேக இருட்டினிலும்
காணத் துடித்திட்டோம் உங்கள் திருமுகத்தினை!

மூச்சிக்காற்றை உணராதபொழுதும் உங்களின்
சுவாசமென்னும் மூச்சினில் கலந்துவிடத்துடித்தோம்!

வாழ்க்கையென்னும் போர்க்களத்தில் எதிர்நீச்சலிட்டிட
தவழவிட்டாயோ வயிற்றினில் அங்குமிங்கும்!

பொறுமையென்னும் நிதர்சனத்தை புகட்டிடவா
சிறைவைத்து பூட்டியிருந்தாய் பத்துமாதங்களும்!

பொதுநலத்திலும் சுயநலத்தைத்தேடும் இவ்வுலகினில்
சுயநலத்திலும் சிறுபொதுநலம் பார்ப்பவர்களல்லவா!

காயத்தின் வலிகளை மனதினில் உணர்பவளும்
எங்களை கருத்தரித்திட்ட நாள்முதல் சுமக்கிறாய்

எங்களின்பாரத்தை உங்களின் ஆயுட்காலம்வரை!
உள்ளிருந்து வெளிவரத் துடித்திட்டோம்...

சிசுவாய் வலம்வந்தநாட்களில் வயிற்றினில்…
ஏங்குகிறதுயின்றோ மீண்டும் வலம்வரத்துடித்து

அவ்வயிறென்னும் வசந்தக்கூட்டினுள் நுழைந்திடத்துடித்து!
கருவறையின் வெப்பத்தினில் உணர்த்திட்டோம் …

உங்கள் கண்ணீரின் மகிமையை!
எங்களின்சிரிப்பின் பரவசத்தை கண்டுதனை

உங்கள் துன்பத்தின் வலிதனை தொலைத்துவிட்டாய்!
உங்கள் வாழ்க்கையின் இலட்சியமாய்
எங்கள் வளர்ப்பினை கண்டீர்களா?
உங்களிருவரின் வாழ்க்கையை தொலைத்து
எங்களை வாழ்வினை நல்வழிப்படுத்தினீர்கள்!
எங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு
உங்களின் தேவைகளை குறைத்து கொண்டவள்!

இப்பிறவியில் தவறவிட்ட சந்தோசத்தை
உங்களின் கடந்தகாலநாட்களை மீட்டெடுத்திட...
உங்களை எங்கள்வயிற்றில் ஈன்றெடுத்து
பிறப்பின் மகிமையறிய வாய்ப்பொன்றுவேண்டுமம்மா!!