அப்பா!
நம்மின் ஒவ்வொருவர் வாழ்விலும்
தம்மின் வாழ்வில் உயிருள்ளவரை
நினைவின் வாயிலாக என்றென்றும்
நிழலாய் நம்மை பின்தொடரும்
நிகரில்லா நடமாடும் உள்ளங்கள்
கருவறையில் சுமந்திட்ட தாய்மட்டுமல்ல
தோள்களில் தூக்கிவளர்த்த தந்தையுமல்லவா
வாழ்விலுயர்ந்திட அல்லும்பகலும் உழைத்திட்டு
நம்மனைவரின் நம்பிக்கை நாயகனாய்
தரணியில் உன்னதமாய் உலாவரும்
உண்மையான தந்தையர்களுக்கு
தம்மின் வாழ்வில் உயிருள்ளவரை
நினைவின் வாயிலாக என்றென்றும்
நிழலாய் நம்மை பின்தொடரும்
நிகரில்லா நடமாடும் உள்ளங்கள்
கருவறையில் சுமந்திட்ட தாய்மட்டுமல்ல
தோள்களில் தூக்கிவளர்த்த தந்தையுமல்லவா
வாழ்விலுயர்ந்திட அல்லும்பகலும் உழைத்திட்டு
நம்மனைவரின் நம்பிக்கை நாயகனாய்
தரணியில் உன்னதமாய் உலாவரும்
உண்மையான தந்தையர்களுக்கு
தந்தையர்களையும் போற்றி புகழ்ந்திட
வார்த்தைகளேது இப்புவியினிலே
வாழ்த்துக்கள்!
- சுபத்ரா நாராயணன் -
- சுபத்ரா நாராயணன் -